பாரிய பண மோசடி தொடர்பில் வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியிடம் எதிர்வரும் 30ஆம் திகதி வரை குற்றப் புலனாய்வு திணைக்களம் சிறைச்சாலைக்கு சென்று வாக்குமூலம் பெறுவதற்கு கொழும்பு கோட்டை நீதவான் அனுமதியளித்துள்ளதாக மேலதிக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கையடக்கத் தொலைபேசியை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் திலினி பிரியமாலி இன்று மீண்டும் சிறைச்சாலை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதாகவும், மேலதிக விசாரணைகளுக்காக அவரை டிசம்பர் 8 ஆம் திகதி சிறைச்சாலை நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் ஏகநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.
N.S