வெல்லம்பிட்டி விசேட தேடுதலில் 28 பேர் கைது

Date:

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களின் பிரசன்னம், அதிகரித்துள்ள குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் காரணமாக வெல்லம்பிட்டிய, சிங்கபுர பிரதேசத்தில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் 28 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையில் 138 காவல்துறை அதிகாரிகள் மற்றும் 200 ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன், மேற்கு தெற்கிற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் கயங்க மாரப்பன, மேற்கு தெற்கு குற்றப் பிரிவின் பணிப்பாளர், பொலிஸ் அத்தியட்சகர் லலிஸ் அபேசேகர மற்றும் ஆகியோரின் பணிப்புரைக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நடவடிக்கையின் கீழ், 61 வீடுகள் மற்றும் 196 நபர்கள் சோதனை செய்யப்பட்டுள்ளனர்.

ஹெரோயின், ஐஸ், சட்டவிரோத போதைப்பொருள், வாள்கள், மன்னா, தடை செய்யப்பட்ட கத்திகள் மற்றும் 12 கையடக்கத் தொலைபேசிகள் அங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொழும்பில் பலமிழக்கும் எதிர்கட்சி!

கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களில் மூவர் இனிமேல் சுயாதீனமாக செயல்படுவதாக அறிவித்துள்ளனர். இவ்வாறு...

பலத்த மழை குறித்த எச்சரிக்கை

கடந்த 22 மணித்தியாலங்களில் நாட்டின் அதிகூடிய மழைவீழ்ச்சியாக 204 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி...

கைதாகாமல் வீடு திரும்பினார் மஹிந்த

லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவின் அறிவிப்பின் பேரில், 2013ஆம்...

விமல் வீரவன்ச மனைவி மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

போலி ஆவணங்களை சமர்ப்பித்து சட்டவிரோதமாக இராஜதந்திர வெளிநாட்டு கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டதாக முன்னாள்...