Thursday, May 22, 2025

Latest Posts

மண்சரிவு அபாயம், 202 பேர் இடமாற்றம்

ஹல்துமுல்ல, பூனாகலை, கல்பொக்க பிரதேசத்தில் மண்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால், அங்கு வசிக்கும் 49 குடும்பங்களைச் சேர்ந்த 202 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாக ஹல்துமுல்ல பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.

தேயிலைத் தோட்டத்திற்கு அருகாமையில் உள்ள சரிவான காணியில் மண்சரிவு அபாயம் உள்ளதால், அதற்குக் கீழே வரிசையாக வீடுகளில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு, வெளியேற்றப்பட்ட குடும்பங்கள் புனகலை இலக்கம் 02 தமிழ் பாடசாலை மற்றும் கல் பொக்க பகல்நேர பராமரிப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த இடம் குறித்து தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்திடம் இருந்து இட ஆய்வு அறிக்கை பெறப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.