வெல்லம்பிட்டி விசேட தேடுதலில் 28 பேர் கைது

Date:

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களின் பிரசன்னம், அதிகரித்துள்ள குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் காரணமாக வெல்லம்பிட்டிய, சிங்கபுர பிரதேசத்தில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் 28 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையில் 138 காவல்துறை அதிகாரிகள் மற்றும் 200 ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன், மேற்கு தெற்கிற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் கயங்க மாரப்பன, மேற்கு தெற்கு குற்றப் பிரிவின் பணிப்பாளர், பொலிஸ் அத்தியட்சகர் லலிஸ் அபேசேகர மற்றும் ஆகியோரின் பணிப்புரைக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நடவடிக்கையின் கீழ், 61 வீடுகள் மற்றும் 196 நபர்கள் சோதனை செய்யப்பட்டுள்ளனர்.

ஹெரோயின், ஐஸ், சட்டவிரோத போதைப்பொருள், வாள்கள், மன்னா, தடை செய்யப்பட்ட கத்திகள் மற்றும் 12 கையடக்கத் தொலைபேசிகள் அங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தூங்கிக் கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு

பாணந்துறை - ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் இன்று (ஜூலை...

அரசாங்கம் எவ்வாறு முகம் கொடுக்கப்போகிறது? கடைப்பிடக்கப்போகும் கொள்கை யாது? அரசாங்கத்தின் பதில் என்ன?

ஐக்கிய அமெரிக்க குடியரசு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி...

இரு முக்கிய பாதாள குழு தலைவர்கள் கைது?

கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் கெஹல்பத்தர பத்மே மற்றும்...

நிஷாந்த ஜெயவீர எம்பியாக சத்தியபிரமாணம்

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட நிஷாந்த...