புதிய பொலிஸ் மா அதிபர் நியமிக்கப்படும் வரை

Date:

புதிய பொலிஸ் மா அதிபர் நியமிக்கப்படும் வரை 9 மாகாணங்களுக்கும் நியமிக்கப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் வழமை போன்று மக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

நான்காவது சேவை நீடிப்பு நிறைவடைந்ததையடுத்து, பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்ன கடந்த வெள்ளிக்கிழமை தனது பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.

விக்கிரமரத்ன அனைத்து சிரேஷ்ட டி.ஐ.ஜி.க்கள் மற்றும் டி.ஐ.ஜி.க்களுக்கு பதவியில் இருந்து ஓய்வு பெறுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்த போதிலும் புதிய ஐஜிபி நியமனம் இன்னும் தாமதமாகி வருகிறது.

எவ்வாறாயினும், புதிய பொலிஸ் மா அதிபர் எதிர்வரும் வாரத்தில் அறிவிக்கப்படுவார் எனவும், இது தொடர்பான விசேட கலந்துரையாடல் இந்த நாட்களில் இடம்பெறும் எனவும் அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மீண்டும் இலங்கையை கட்டி எழுப்புவோம்

கடந்த நாட்களில், நமது நாடு கடினமான மற்றும் இதயத்தை உடைக்கும் சவாலை...

15ஆம் திகதிக்கு முன்னர் அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் கைது

அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை கைது செய்து எதிர்வரும் 15 திகதிக்கு...

பேரழிவுகளால் சேதமடைந்த அழகு நிலையங்களுக்கு உதவும் Dreamro!

நாடு முழுவதும் ஏற்பட்ட சமீபத்திய பேரழிவுகளால் சேதமடைந்த அழகு நிலையங்களுக்கு உதவுவதற்காக...

இலங்கை மக்களாக நாம் எப்படி மீள்வது! – நளிந்த இந்ததிஸ்ஸ

என் அன்பான சக இலங்கையர்களே, ஒரு சோகம் என்பது நாம் தாங்கிக் கொள்ளும்...