பெண்களை ஓமானில் விற்பனை செய்த குற்றச்சாட்டு – ஈ.குஷான் கைது

0
164

ஓமானில் உள்ள இலங்கை தூதரகத்தின் 3வது அதிகாரியாக பணியாற்றிய ஈ.குஷானுக்கு எதிராக இலங்கைப் பெண்களை ஓமானில் விற்பனை செய்ததாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், அவரை விசாரணைகளுக்காக இலங்கைக்கு அழைத்து வருவர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

ஓமானின் மஸ்கட் நகரில் இருந்து இன்று அதிகாலை 3.57 மணி அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த அவரை குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் இவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here