போதைப் பொருள் வியாபாரிகளுக்கு பதில் பொலிஸ் மா அதிபர் சிவப்பு எச்சரிக்கை

Date:

தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதும் போதைப் பொருள் மற்றும் திட்டமிட்ட குற்றச்செயல்களை ஒழிப்பதுவுமே தனது பணிப் பட்டியலில் முதன்மையானது என பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்ட பின் கொழும்பு கங்காராம விகாரையில் இன்று (29) மத வழிபாடுகளில் ஈடுபட்ட பின் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

“நானும் சுமார் 25 வருடங்களாக பொலிஸில் பல்வேறு பதவிகளை வகித்த ஒருவர். எனவே எங்களுக்கு அனுபவம் உள்ளது. இலங்கை மக்களின் நலனுக்காக இலங்கை பொலிஸ் சேவையை முன்னோக்கி கொண்டு செல்கிறோம். எனது முன்னுரிமைப் பட்டியலில் தேசிய பாதுகாப்பு தான் முதன்மையானது. இரண்டாவது முன்னுரிமை இந்த நாட்டில் போதைப்பொருள் இல்லாதொழிக்க வேண்டும். இன்று பாடசாலை மாணவர்களுக்கும் கிராமங்களுக்கும் இது ஒரு பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது. போதைப்பொருள் எங்கும் உள்ளது. இது சம்பந்தமாக என்னிடம் ஒரு திட்டம் உள்ளது. அதை செயல்படுத்துவேன். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களால் ஏற்படும் அச்சுறுத்தலைச் சமாளிக்கவும் பார்க்கிறேன். மிரட்டி பணம் பறித்தல் போன்ற விடயங்கள். அவை எனது முன்னுரிமை பட்டியலில் முதலிடத்தில் உள்ளன. என்னுடைய சேவையைப் பெற்றவர்களுக்கு நான் எப்படிச் செயல்பட்டேன் என்பது தெரியும். என்னுடன் பணிபுரிந்த அதிகாரிகளுக்கும் தெரியும். இப்போது அதை அவர்கள் என் செயல்களில் பார்க்க முடியும்.” என்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...