‘பட்ஜட்’டை நிறைவேற்ற ஜனாதிபதி தரப்பு தீவிரம்

Date:

2023ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பின்போது வரவு – செலவுத் திட்டம் தோல்வியடைந்துவிடுமோ என்ற அச்சம் ஜனாதிபதி தரப்புக்கு ஏற்பட்டுள்ளதால் இப்போதே அவர்கள் வாக்கு வேட்டையில் ஈடுபட்டுள்ளார்கள் என்று அறியமுடிகின்றது.

ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு 134 வாக்குகள் கிடைத்தன. ஆனால், நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்துள்ள வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின்போது 121 வாக்குகள்தான் கிடைத்தன.

இதனால் ஒருவேளை பட்ஜட் தோல்வியடைந்துவிடுமோ என்று ஜனாதிபதி தரப்பு அஞ்சுகின்றது.

அரசுக்குள்ளும் சிலர் அமைச்சுப் பதவிகள் கேட்டு ரணிலுடன் முட்டி மோதுவதால் அவர்கள் இறுதி நேரத்தில் காலைவாரி விடுவார்களோ என்ற அச்சம் ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் அரசுக்குள்ளும் அரசுக்கு வெளியேயும் வாக்கு வேட்டையில் ஜனாதிபதி தரப்பு ஈடுபட்டுள்ளது என்று அறியமுடிகின்றது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

6வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் DP Education

இலங்கையின் முன்னணி ஆன்லைன் கல்வி தளமான DP Education, இன்று (அக்டோபர்...

மதுக்கடைகளுக்கு பூட்டு

தீபாவளி தினத்தன்று வட மாகாணத்திலுள்ள அனைத்து மதுபான சாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியிடம்...

முதலாளிமார் சம்மேளனத்தை வன்மையாக கண்டிக்கும் செந்தில் தொண்டமான்!

இன்று தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான பேச்சுவார்த்தை சம்பள நிர்ணய...

தங்கம் விலை நிலவரம்

இலங்கை வரலாற்றில் 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று...