இதுவரை 465 பேர் பலி

Date:

நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்த அனர்த்த நிலைமை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 465 ஆக உயர்ந்துள்ளதாக அனார்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

நேற்று (02) இரவு வெளியிடப்பட்ட அறிக்கையில், மேலும் 366 பேர் காணாமல் போயுள்ளதாக அனார்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அனார்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கண்டி மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான இறப்புகள், 118 இறப்புகள் பதிவாகியுள்ளன.

இதற்கிடையில், பதுளை மாவட்டத்தில் 83 இறப்புகளும், நுவரெலியா மாவட்டத்தில் 89 இறப்புகளும், குருநாகலில் 53 இறப்புகளும், புத்தளம் மாவட்டத்தில் 27 இறப்புகளும் பதிவாகியுள்ளன.

கண்டி மாவட்டத்தில் 171 பேர், நுவரெலியாவில் 73 பேர், கேகாலை மாவட்டத்தில் 48 பேர், பதுளையில் 28 பேர் மற்றும் குருநாகலில் 27 பேர் பேரிடர் காரணமாக ஏற்கனவே காணாமல் போயுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதகமான வானிலையால் 437,507 குடும்பங்களைச் சேர்ந்த 1,558,919 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வெசாக் விடுமுறை, விசேட வர்த்தமானி

2026ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் உற்சவத்தின் உத்தியோகபூர்வ நிகழ்வு மே மாதம்...

நிதி திருட்டுக்கு ஜனாதிபதி, நிதி செயலாளர் பொறுப்பு

மத்திய காசாகாரத்திலிருந்து அமெரிக்க டாலர் 2.5 மில்லியன் தொகை காணாமல் போன...

ஷம்மி சில்வாவை அகற்றும் முடிவு பொய்

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வாவை அந்த பதவியில் இருந்து...

1000 கோடி தர முடியாது – சட்டத்தின் ஊடாக மோதி பார்ப்போம்!

விவசாயம், நிலம், பாசனம் மற்றும் கால்நடை வளங்கள் அமைச்சர் கே.டி. லால்காந்தின்...