ஷெமாரா விக்ரமநாயக்க மீண்டும் தெரிவு

0
196

அவுஸ்திரேலியாவில் அதிக சம்பளம் வாங்கும் பிரதம நிறைவேற்று அதிகாரியாக இலங்கை வம்சாவளியை சேர்ந்த ஷெமாரா விக்ரமநாயக்க மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

முக்கிய நிதி நிறுவனமான மெக்கரி குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, அவரது ஆண்டு சம்பளம் 30 மில்லியன் டாலர்களுக்கு மேல் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு தொடர்பாக வெளியிடப்பட்ட ஆஸ்திரேலிய நிதி மதிப்பாய்வின் சமீபத்திய ஆய்வு அறிக்கையில் இது காட்டப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் முதல் 10 இடங்களில் ஷெமாரா விக்ரமநாயக்க ஒருவரே பெண் என்பது சிறப்பு.

இவரைத் தவிர மேலும் ஒரு பெண் மட்டும் முதல் 50 இடங்களில் உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here