மாலைதீவு – இலங்கைக்கு இடையில் பரஸ்பர சட்ட ஒத்துழைப்பு!

Date:

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு மற்றும் மாலைதீவு குடியரசுக்கும் இடையிலான குற்றவியல் விடயங்களில் பரஸ்பர சட்ட ஒத்துழைப்புக்களை வழங்குதல் தொடர்பான ஒப்பந்தத்தை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதற்கு ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

எனினும், மாலைதீவு தரப்பினர் ஒப்பந்த வரைபுக்கு பின்னர் ஒரு சில மேலதிக திருத்தங்களை முன்மொழிந்து, குறித்த ஒப்பந்தத்தில் கையொப்பமிடாமல் இருந்தனர்.

பின்னர் இருதரப்பின் உடன்பாடுகளுக்கமைய திருத்தப்பட்ட புதிய ஒப்பந்த வரைபு தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கு சட்டமா அதிபரின் ஒப்புதலும் கிடைத்துள்ளது.

அதற்கமைய, குறித்த ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கும், பின்னர் ஒப்பந்தத்தை இருநாடுகளின் இராஜதந்திர தூதுக்குழுவால் ஏற்று அங்கீகரிப்பதற்கும் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

10 அம்சக் கோரிக்கைகளை இந்திய உப-ஜனாதிபதியிடம் முன்வைக்க மனோ அணி திட்டம்

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையக தமிழர்களில் எவரும் விரும்புகின்ற பட்சத்தில்,...

முக்கிய கோரிக்கைகளுடன் இந்திய துணை ஜனாதிபதியை சந்திக்க இ.தொ.கா தயார்

இலங்கைக்கு நாளை உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ள இந்திய துணை ஜனாதிபதி...

JVPஇல் கோடீஸ்வரர்கள் உருவாகுவது மகிழ்ச்சி

ஜனதா விமுக்தி பெரமுன (JVP) கட்சியிலிருந்து கோடீஸ்வரர்கள் உருவாகுவது குறித்து தாம்...

நிலக்கரி மோசடிக்கு முழு அமைச்சரவை பொறுப்பேற்க வேண்டும் – SJB

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அமைச்சின் செயலாளர்...