கசினோ சட்டத்துக்கு கோப் குழு அனுமதி

Date:

பொது நிதி தொடர்பான குழு (COPF) 2010ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க கசினோ வர்த்தக (ஒழுங்குமுறை) சட்டத்தின் கீழ் உள்ள சரத்துக்களுக்கு அனுமதி அளித்துள்ளதாக கோப் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

கடுமையான நிபந்தனைகளின் கீழ் சூதாட்ட விடுதிகளை ஒழுங்குபடுத்துவதற்கு கோப் குழு அனுமதி வழங்கியுள்ளது. இலங்கையில் சூதாட்ட விடுதிகளை நடத்துவதற்கான உரிமங்களை வழங்குவதற்காக சூதாட்ட ஒழுங்குமுறை ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

கசினோ ஒழுங்குமுறை ஆணையம் இல்லாதது மற்றும் அது தொடர்பான பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்த குழு, ஒழுங்குமுறை ஆணைக்குழு இல்லாமல் சூதாட்ட விடுதிகளை நடத்துவதற்கான உரிமம் வழங்கப்படக் கூடாது என்று கருத்து தெரிவித்ததுடன், இதற்கு கடும் ஆட்சேபனையும் தெரிவிக்கப்பட்டது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இலங்கை மக்களாக நாம் எப்படி மீள்வது! – நளிந்த இந்ததிஸ்ஸ

என் அன்பான சக இலங்கையர்களே, ஒரு சோகம் என்பது நாம் தாங்கிக் கொள்ளும்...

இலங்கையின் கோரிக்கைக்கு IMF முன்னுரிமை

'திட்வா' புயலால் ஏற்பட்ட அழிவைத் தொடர்ந்து ஏற்பட்ட சவால்களை எதிர்கொள்வதற்காக, அவசர...

முட்டை விலை 70 வரை உயரும்

பேரிடர் காரணமாக கால்நடை பண்ணைகளுக்கு ஏற்பட்ட சேதத்துடன், ஒரு முட்டையின் விலை...

தமிழக முதல்வர், மக்களுக்கு இலங்கை மக்கள் சார்பாக செந்தில் தொண்டமான் நன்றி

இலங்கையில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப்...