இலங்கைக்கு இந்தியாவின் பொருளாதார ஆதரவு எந்தொரு நலனையும் கொண்டதல்ல!

Date:

நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள அண்டை நாடுகளுக்கு ஆதரவளிக்க முன்வரவில்லை என்றால், இந்தியா தனது பொறுப்பைத் தட்டிக்கழிக்கிறது என அர்த்தம். ஆனால், இந்தியா இவ்வாறு இல்லை. அண்டைய நாடுகளுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் எமது கொள்கை அமைந்துள்ளது. இலங்கைக்கு இந்திய அரசாங்கத்தின் ஆதரவு எப்போதும் உள்ளது என இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

சுதந்திரத்திற்குப் பின்னரான மிக மோசமான பொருளாதார நெருக்கடியின் போது இலங்கைக்கு இந்தியா வழங்கிய பொருளாதார ஆதரவு முழு நாட்டிற்கும் உரியது அன்றி எந்தவொரு இனவாத அணுகுமுறையையும் அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை.

பாலஸ்தீனப் பிரச்சினையில், இரு நாடுகளும் அருகருகே அமைதியாக வாழ்வதன் மூலம், இரு நாடுகளின் தீர்வுக்காக இந்தியா துணை நிற்கிறது.

ஜெனிவாவில் இலங்கை தொடர்பான ஐநா மனித உரிமைகள் பேரவையின் வரைவுத் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமை குறித்து எஸ்.ஜெய்சங்கரிடம் நாடாளுமன்றில் ம.தி.மு.க உறுப்பினர் வைகோ விளக்கம் கேட்டிருந்தார்.

இலங்கையில் ஐநா மனித உரிமைகள் பேரவையின் வரைவுத் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர், பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டனர், குழந்தைகள் கொல்லப்பட்டனர், இலங்கைக்கு அப்போதைய அரசு ஆயுதம் கொடுத்தது, இன்னும் இந்திய அரசு இலங்கைக்கு ஆதரவாக உள்ளது என்று வைகோ கூறினார்.

ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கைக்கு எதிராக வாக்களிப்பதில் இருந்து இந்தியா விலகியிருப்பது நீண்ட கால நிலைப்பாட்டிற்கு இணங்குவதாகவேயாகும். முந்தைய அரசாங்கங்களும் இலங்கையில் தமிழ் சமூகத்தின் நலன்களை மேம்படுத்துதல் என்பது எமது அணுகுமுறையாகத் தொடர்கிறது என்றார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கபில சந்திரசேனவின் சடலம் மீது உடல் கூற்று பரிசோதனை

கபில சந்திரசேனவின் மரணத்திற்கான சரியான காரணத்தை கண்டறிவதற்காக அவரது உடல் உறுப்புகள்...

தன் மீதான தாக்குதல் செய்தி குறித்து டில்வின் சில்வா!

JVP தலைமையகமான பெலவத்தையில் வைத்து தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக எதிர்க்கட்சியினரும்...

யாழ். போதனா வைத்தியசாலையில் தீ விபத்து!

​யாழ். மண்ணின் உயிர்நாடியாக விளங்கும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று அதிகாலை...

கப்பில சந்திரசேன தற்கொல?

கப்பில சந்திரசேன “தற்கொலை செய்து கொண்டார்” என்ற தகவல்கள் சமூக ஊடகங்கள்...