போலியாக பதிவு செய்யப்பட்ட 6,000 வாகனங்கள் பயன்பாட்டில்

Date:

வரி செலுத்தாமல் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் போலியாக பதிவு செய்யப்பட்ட சுமார் 6,000 வாகனங்கள் பயன்பாட்டில் இருப்பது குறித்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

அடையாளம் காணப்பட்ட வாகனங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அவ்வாறான வாகனங்கள் விசாரணைக்காக கைப்பற்றப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காகவும் சுங்க வரிகள் மற்றும் ஏனைய கட்டணங்களை வசூலிப்பதற்காகவும் சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, இவற்றிற்கு ஒரு தீர்வாக வாகனத்தை கொள்வனவு செய்யும் நபர் வாகனத்தை வாங்குவதற்கு முன்னர், இறக்குமதி வரிகள் மற்றும் பிற கட்டணங்கள் முறையாக செலுத்தப்பட்டதா என்பதை சரிபார்க்க, சுங்கத்துறை இணைய தளம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது

இதன்மூலம், ஒருவர் கொள்வனவு செய்ய எதிர்பார்க்கப்படும் வாகனம் இலங்கைக்கு சட்டபூர்வமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளதா மற்றும் முறையான வரி செலுத்தப்பட்டுள்ளதா என்பதை அறிந்துகொள்ளமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளத

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இலங்கை நிலக்கரி நிறுவன அலுவலகத்திற்கு பூட்டு

2009 ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட நிலக்கரி இறக்குமதிகள் குறித்து ஜனாதிபதி...

அதிகார மோகத்தில் NPP தரப்பு கலவரம்!

மாத்தறை கூட்டுறவு வைத்தியசாலையின் நிர்வாக அதிகாரத்தை முறையான தேர்தல் இன்றி கைப்பற்ற...

BYD ATTO 1 தொடர்பிலும் சிக்கல்

ஜான் கீல்ஸ் CG ஆட்டோ (பிரைவேட்) லிமிடெட் நிறுவனம் BYD ATTO...

மஹிந்தவின் சொத்து விபரம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தமது சொத்துகள் மற்றும் கடன்கள் தொடர்பான...