மீகொட நாகஹவத்த பிரதேசத்தில் காரில் பயணித்த போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர் தனது மனைவி மற்றும் சிறு குழந்தையுடன் தனது மூத்த சகோதரர் வீட்டில் நடைபெற்ற விருந்தில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இருவர் திடீரென வந்து துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிச் சென்றுள்ளதாகவும், சம்பவத்தில் மீகொட நாகஹவத்த வீதி பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.