உள்ளூராட்சி தேர்தல் குறித்த திருத்தம் விரைவில் பாராளுமன்றில் சமர்பிப்பு

Date:

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கான சட்டத் திருத்தங்கள் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

சட்ட ஆவணங்களை தொகுத்து அதற்கான திருத்தங்கள் தயாரிக்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.

இதன்படி, சட்டமா அதிபரின் பரிந்துரைகளின் அடிப்படையில் இது அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படும்.

அதன் பின்னர் உடனடியாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

அரசியல் கட்சித் தலைவர்களின் இணக்கப்பாட்டின் அடிப்படையில் 2023 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களை ரத்து செய்ய அமைச்சரவை அண்மையில் நடவடிக்கை எடுத்தது.

இது தொடர்பான திருத்தங்கள் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அடுத்த மூன்று ஆண்டுகளில் 13,600 புதிய தாதியர்கள் நியமனம்

இலங்கையின் தாதியர் சேவைக்காக அடுத்த மூன்று ஆண்டுகளில் 13,600 புதிய தாதியர்...

இலங்கையின் ஆடை மற்றும் நெசவுத் துறை ஏற்றுமதி வருவாய் 7.3% வீழ்ச்சி

மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வு திணைக்களம் ஏப்ரல் மாதத்திற்காக வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,...

அரசியல்வாதிகள் திருடவில்லை; அரச சேவையாளர்கள் இன்னும் திருடுகின்றனர்

– அமைச்சர் கே.டி. லால்காந்த தற்போது அரசியல்வாதிகள் ஊழல் அல்லது திருட்டில் ஈடுபடவில்லை...

ராஜாங்கனே சத்தாரதன தேரர் மீது தாக்குதல்

பிக்குத் துறவியிலிருந்து நீக்கப்பட்ட ராஜாங்கனே சத்தாரதன என அழைக்கப்படும் தேரர் மீது...