கல்வித் தகைமைகளை சமர்ப்பித்தார் சஜித்!

Date:

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது கல்வித் தகைமைகளை இன்று (18) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

அவர் தனது முன்பள்ளிக் கல்வியை புனித பிரிட்ஜெட்ஸ் கொன்வன்ட்டிலும், தரம் 1 முதல் தரம் 5 வரை புனித தோமஸ் ஆரம்பப் பாடசாலையிலும், தரம் 6 முதல் தரம் 9 வரை ரோயல் கல்லூரியிலும் கற்றதாக தெரிவித்தார்.

மேலும், இலங்கையில் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவில்லை என்றும் அவர் கூறினார்.

மேலும், அவர் இங்கிலாந்தில் உள்ள மில்ஹில் கல்லூரியில் படித்ததாகவும், 1983-1984 காலகட்டத்தில் அந்நாட்டில் பொது நிலை தேர்வில் கலந்து கொண்டு தேர்வில் 2 ஏ சித்தியும், 2 பி சித்தியும், 3 சி சித்தியும் பெற்று தேர்ச்சி பெற்றதாக கூறினார்.

தனது சான்றிதழ்களை சமர்ப்பித்த பின்னர் உரையாற்றுகையில் இவைகள் பொய்யாக இருக்கும் பட்சத்தில் அல்லது தான் பொய்யான சான்றிதழ்களை முன்வைத்திருந்தால், அது குறித்து நிரூபிக்கப்படும் பட்சத்தில் தான் எதிர்கட்சித் தலைமைப் பதவியில் இருந்தும் அரசியலில் இருந்தும் ஓய்வு பெறுவதாக தெரிவித்திருந்தார்.

மேலும், இறுதியில் அவரது பிறப்புச் சான்றிதழையும் சபையில் சமர்ப்பித்திருந்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மேலும் ஒரு பணப்பரிமாற்ற மோசடி அம்பலம்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) உள்ள நிறுவனம் ஒன்றிற்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்...

பெருந்தோட்ட வன்தாக்குதல் புதனன்று பல்தரப்பு மாநாடு – மனோவின் முயற்சிக்கு வெற்றி

பெருந்தோட்ட வாழ் மக்கள் மீது அதிகரித்து வரும் வன்முறைகளை எதிர்கொள்ள, சகல...

வாகன இறக்குமதி வரி 50% உயர்வு

இலங்கையில் தெரிவுசெய்யப்பட்ட சில மோட்டார் வாகனங்களின் இறக்குமதிக்கு விதிக்கப்படும் சுங்க இறக்குமதி...

கண்டி சம்பவம் குறித்து சம்பத் வங்கி விசேட அறிக்கை!

கண்டி தலதா வீதியில் அமைந்துள்ள அதன் கிளை மற்றும் அங்குள்ள அதிகாரிகள்...