கல்வித் தகைமைகளை சமர்ப்பித்தார் சஜித்!

Date:

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது கல்வித் தகைமைகளை இன்று (18) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

அவர் தனது முன்பள்ளிக் கல்வியை புனித பிரிட்ஜெட்ஸ் கொன்வன்ட்டிலும், தரம் 1 முதல் தரம் 5 வரை புனித தோமஸ் ஆரம்பப் பாடசாலையிலும், தரம் 6 முதல் தரம் 9 வரை ரோயல் கல்லூரியிலும் கற்றதாக தெரிவித்தார்.

மேலும், இலங்கையில் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவில்லை என்றும் அவர் கூறினார்.

மேலும், அவர் இங்கிலாந்தில் உள்ள மில்ஹில் கல்லூரியில் படித்ததாகவும், 1983-1984 காலகட்டத்தில் அந்நாட்டில் பொது நிலை தேர்வில் கலந்து கொண்டு தேர்வில் 2 ஏ சித்தியும், 2 பி சித்தியும், 3 சி சித்தியும் பெற்று தேர்ச்சி பெற்றதாக கூறினார்.

தனது சான்றிதழ்களை சமர்ப்பித்த பின்னர் உரையாற்றுகையில் இவைகள் பொய்யாக இருக்கும் பட்சத்தில் அல்லது தான் பொய்யான சான்றிதழ்களை முன்வைத்திருந்தால், அது குறித்து நிரூபிக்கப்படும் பட்சத்தில் தான் எதிர்கட்சித் தலைமைப் பதவியில் இருந்தும் அரசியலில் இருந்தும் ஓய்வு பெறுவதாக தெரிவித்திருந்தார்.

மேலும், இறுதியில் அவரது பிறப்புச் சான்றிதழையும் சபையில் சமர்ப்பித்திருந்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நாட்டின் இரண்டு பகுதிகளுக்கு மண்சரிவு அபாய...

இலங்கையில் 19.4 சதவீத மக்களுக்கு மன அழுத்தம்

இலங்கையில் வாழும் மொத்த மக்கள் தொகையில்  ஐந்தில் ஒரு பகுதியினர், அதாவது...

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும்

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ICCPR சட்டத்தின்...