கல்வித் தகைமைகளை சமர்ப்பித்தார் சஜித்!

Date:

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது கல்வித் தகைமைகளை இன்று (18) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

அவர் தனது முன்பள்ளிக் கல்வியை புனித பிரிட்ஜெட்ஸ் கொன்வன்ட்டிலும், தரம் 1 முதல் தரம் 5 வரை புனித தோமஸ் ஆரம்பப் பாடசாலையிலும், தரம் 6 முதல் தரம் 9 வரை ரோயல் கல்லூரியிலும் கற்றதாக தெரிவித்தார்.

மேலும், இலங்கையில் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவில்லை என்றும் அவர் கூறினார்.

மேலும், அவர் இங்கிலாந்தில் உள்ள மில்ஹில் கல்லூரியில் படித்ததாகவும், 1983-1984 காலகட்டத்தில் அந்நாட்டில் பொது நிலை தேர்வில் கலந்து கொண்டு தேர்வில் 2 ஏ சித்தியும், 2 பி சித்தியும், 3 சி சித்தியும் பெற்று தேர்ச்சி பெற்றதாக கூறினார்.

தனது சான்றிதழ்களை சமர்ப்பித்த பின்னர் உரையாற்றுகையில் இவைகள் பொய்யாக இருக்கும் பட்சத்தில் அல்லது தான் பொய்யான சான்றிதழ்களை முன்வைத்திருந்தால், அது குறித்து நிரூபிக்கப்படும் பட்சத்தில் தான் எதிர்கட்சித் தலைமைப் பதவியில் இருந்தும் அரசியலில் இருந்தும் ஓய்வு பெறுவதாக தெரிவித்திருந்தார்.

மேலும், இறுதியில் அவரது பிறப்புச் சான்றிதழையும் சபையில் சமர்ப்பித்திருந்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அரசாங்கத்துக்கு மக்கள் மத்தியில் பெருகும் ஆதரவு

2026 பெப்ரவரி மாதத்தின் முற்பகுதியில் அரசாங்கத்திற்கான மக்கள் அங்கீகாரம் 65% ஆகப்...

சட்டத்தரணிகள் எடுத்துள்ள அதிரடி முடிவு!

நாளை (16) நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள்...

இந்தியா–பாகிஸ்தான் உறவுகளை மீண்டும் தொடங்க இலங்கை மத்தியஸ்தம்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான இருதரப்பு உறவுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்காக இலங்கையை...

மகத்தான விரதமான மகா சிவராத்திரி இன்று

இந்து தர்மத்தில் சிவபெருமானுக்குரிய முக்கிய விரதங்களில் மிகவும் மகத்தான விரதமாக மகா...