லுணுகலை பிரதேச சபையில் மீண்டும் மலர்ந்தது பொதுஜன பெரமுனவின் ஆட்சி!

Date:

லுணுகலை பிரதேச சபையின் புதிய தவிசாளரை தேர்ந்தெடுக்கும் முகமான வாக்கெடுப்பில் சிறிலங்கா பொது ஜன பெரமுனவை சேர்ந்த ஒருவரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த ஒருவருமாக இருவர் போட்டியிட்டனர். 

இதில் சிறிலங்கா பொது ஜன பெரமுனவை சேர்ந்த L..P.N.U.A.அநுரவிக்ரமதுங்க மேலதிக மூன்று வாக்குகளால் தவிசாளராக இன்றைய தினம் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

இவருக்கு ஆதரவாக ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த 7 உறுப்பினர்களும் சிறிலங்கா பொது ஜன பெரமுனவை சேர்ந்த 3 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

 இவருக்கு கிடைக்கப்பெற்ற மொத்த வாக்குகள் 10ஆகும்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் பிரதிநிதித்துவப் படுத்திய R.W.P.L.U. எட்வின்க்கு கிடைக்கப்பெற்ற மொத்த வாக்குகள் 7ஆகும். 

சிறி லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மூவரும் சிறிலங்கா பொது ஜன பெரமுன உறுப்பினர்கள் இருவரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர்கள் இருவருமாக மொத்தமாக 7 வாக்குகளை இவருக்கு அளித்தனர்.

ஜேவிபி உறுப்பினர் ஒருவரும் மலையக மக்கள் முன்னணியின் உறுப்பினர் ஒருவரும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவை சேர்ந்த நடுநிலை வகித்தமை குறிப்பிடத்தக்கது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

குடு விற்பனை செய்யும் NPP அரசாங்க தரப்பு

நாட்டில் போதைப்பொருள் தொற்றுநோயை ஒழிக்க அரசாங்கம் கட்சி சார்பற்ற முறையில் செயல்படுவதை...

NPP கொலன்னா பிரதேச சபை முதல் பட்ஜெட் தோற்கடிப்பு

தேசிய மக்கள் சக்தி கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள கொலன்னா பிரதேச சபையின்...

கொழும்பில் நடந்த “ஒற்றுமையின் எதிரொலிகள்”

இலங்கையில் சமூக ஒற்றுமை மற்றும் அமைதியை வலுப்படுத்துதல் (SCOPE) திட்டத்தின் இறுதி...

NPP ஹிங்குராக்கொடை பிரதேச சபை உறுப்பினர் பிணையில் விடுவிப்பு

ஹிங்குராக்கொடை காவல் நிலையத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காகவும், இரண்டு காவல்துறை அதிகாரிகளை...