லுணுகலை பிரதேச சபையில் மீண்டும் மலர்ந்தது பொதுஜன பெரமுனவின் ஆட்சி!

Date:

லுணுகலை பிரதேச சபையின் புதிய தவிசாளரை தேர்ந்தெடுக்கும் முகமான வாக்கெடுப்பில் சிறிலங்கா பொது ஜன பெரமுனவை சேர்ந்த ஒருவரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த ஒருவருமாக இருவர் போட்டியிட்டனர். 

இதில் சிறிலங்கா பொது ஜன பெரமுனவை சேர்ந்த L..P.N.U.A.அநுரவிக்ரமதுங்க மேலதிக மூன்று வாக்குகளால் தவிசாளராக இன்றைய தினம் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

இவருக்கு ஆதரவாக ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த 7 உறுப்பினர்களும் சிறிலங்கா பொது ஜன பெரமுனவை சேர்ந்த 3 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

 இவருக்கு கிடைக்கப்பெற்ற மொத்த வாக்குகள் 10ஆகும்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் பிரதிநிதித்துவப் படுத்திய R.W.P.L.U. எட்வின்க்கு கிடைக்கப்பெற்ற மொத்த வாக்குகள் 7ஆகும். 

சிறி லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மூவரும் சிறிலங்கா பொது ஜன பெரமுன உறுப்பினர்கள் இருவரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர்கள் இருவருமாக மொத்தமாக 7 வாக்குகளை இவருக்கு அளித்தனர்.

ஜேவிபி உறுப்பினர் ஒருவரும் மலையக மக்கள் முன்னணியின் உறுப்பினர் ஒருவரும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவை சேர்ந்த நடுநிலை வகித்தமை குறிப்பிடத்தக்கது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இந்த வரவு செலவு திட்டத்தை தோண்டத் தோண்ட தங்கம் வரும்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தாக்கல் செய்த 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்,...

இராணுவப் பயன்பாட்டில் உள்ள தனியார் காணிகளை விடுவிக்க நடவடிக்கை

யாழ்ப்பாணம் பலாலி பகுதிகளில் தற்போது இராணுவப் பயன்பாட்டில் உள்ள தனியார் காணிகளை...

இலங்கைக்கு பாம்பு, ஆமை கடத்தும் மர்ம கும்பல்

சென்னையை மையமாக வைத்து, வெளிநாடுகளில் இருந்து அரியவகை உயிரினங்கள் கடத்தப்பட்டு, அவை...

21ஆம் திகதிக்கு பின்னர் புலம்ப வேண்டாம் – நாமல்

தற்போதைய அரசாங்கத்தால் அநீதி இழைக்கப்பட்ட அனைவரும் 21 ஆம் திகதி நுகேகொடைக்கு...