லுணுகலை பிரதேச சபையில் மீண்டும் மலர்ந்தது பொதுஜன பெரமுனவின் ஆட்சி!

Date:

லுணுகலை பிரதேச சபையின் புதிய தவிசாளரை தேர்ந்தெடுக்கும் முகமான வாக்கெடுப்பில் சிறிலங்கா பொது ஜன பெரமுனவை சேர்ந்த ஒருவரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த ஒருவருமாக இருவர் போட்டியிட்டனர். 

இதில் சிறிலங்கா பொது ஜன பெரமுனவை சேர்ந்த L..P.N.U.A.அநுரவிக்ரமதுங்க மேலதிக மூன்று வாக்குகளால் தவிசாளராக இன்றைய தினம் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

இவருக்கு ஆதரவாக ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த 7 உறுப்பினர்களும் சிறிலங்கா பொது ஜன பெரமுனவை சேர்ந்த 3 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

 இவருக்கு கிடைக்கப்பெற்ற மொத்த வாக்குகள் 10ஆகும்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் பிரதிநிதித்துவப் படுத்திய R.W.P.L.U. எட்வின்க்கு கிடைக்கப்பெற்ற மொத்த வாக்குகள் 7ஆகும். 

சிறி லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மூவரும் சிறிலங்கா பொது ஜன பெரமுன உறுப்பினர்கள் இருவரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர்கள் இருவருமாக மொத்தமாக 7 வாக்குகளை இவருக்கு அளித்தனர்.

ஜேவிபி உறுப்பினர் ஒருவரும் மலையக மக்கள் முன்னணியின் உறுப்பினர் ஒருவரும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவை சேர்ந்த நடுநிலை வகித்தமை குறிப்பிடத்தக்கது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ரணில் தெரிவித்துள்ள நன்றி

தனது வீட்டிலிருந்து வீடியோ இணைப்பு மூலம் கருத்து தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி...

CID அழைப்பில் திடீர் திருப்பம்

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாக...

முழு இரத்த நிற சந்திர கிரகணம் செப்டம்பரில்

இலங்கை மற்றும்  பல நாடுகளுக்குத் தெரியும் முழு இரத்த நிற சந்திர...

மீண்டும் 1000க்கும் மேற்பட்ட BYD கார்கள் இலங்கை சுங்கத்தால் தடுத்து வைப்பு

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட 1000க்கும் மேற்பட்ட BYD கார்கள் இலங்கை சுங்கத்தால்...