பௌத்த & பாலி பல்கலைக்கழகத்தின் 30 மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தம்!

Date:

மதுபான விருந்து மற்றும் கட்டுக்கடங்காத நடத்தை காரணமாக பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தின் 30 மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இதனை பல்கலைக்கழக துணைவேந்தர் வண.நேருவே சுமணவன்ச தேரர் அஸ்கிரிய மற்றும் மல்வத்தை பீடாதிபதிகளை நேற்று சந்தித்து, பல்கலைக்கழகத்தை மீள திறப்பது தொடர்பான ஆலோசனைகளை பெற்றுக் கொண்டார்.

இந்த கூட்டத்தில் உயர்கல்வித்துறை இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவனும் கலந்துகொண்டார்.

ஹோமாகமவில் உள்ள பௌத்த & பாலி பல்கலைக்கழகத்தின் பகிடி வதை சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்ததை அடுத்து, மறு அறிவிப்பு வரும் வரை டிசம்பர் 19 அன்று மூடப்பட்டது.

பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் செயலாளர் வண.தலாவ தம்மிக்க தேரர் மற்றும் மேலும் இரு மாணவர்களும் இருவேறு சம்பவங்கள் தொடர்பில் அண்மையில் கைது செய்யப்பட்டு, இருவரும் டிசம்பர் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எஸ்.எம். சந்திரசேன விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு விளக்கமறியல் 2015 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ரூ....

மருந்து உற்பத்தி துறையில் புரட்சிகர மாற்றம்!

100 சதவீதம் இலங்கைக்குச் சொந்தமான மருந்து உற்பத்தி நிறுவனமான சினெர்ஜி பார்மாசூட்டிகல்ஸ்,...

மருத்துவமனைகளும் உணவகங்களும் தொற்றா நோய்கள் பரவும் மையங்களாக மாறிவிட்டன!

உணவுக் கட்டுப்பாட்டு வர்த்தமானிகளில் தாமதம் ஏற்படுவதால் பொது சுகாதாரம் ஆபத்தில் உள்ளது....

யார் என்ன சொன்னாலும் கொள்கை முடிவில் மாற்றம் இல்லை – லால்காந்த

ஒவ்வொரு முறையும் பொருத்தமான வழிமுறையின்படி எரிபொருள் விலைகள் குறைக்கப்படுகின்றன அல்லது அதிகரிக்கப்படுகின்றன...