2023 ஜனவரி முதல் தனிநபர் வருமான வரி அறவிடும் முறை வெளியானது!

Date:

புதிய வரித் திருத்தத்தின்படி ஜனவரி 01, 2023 முதல் வருமான வரி எவ்வாறு விதிக்கப்படும் என்பதை நிதிய பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சகம் இன்று விரிவாகக் கூறியுள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில், அமைச்சின் நிதிக்கொள்கை திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கபில சேனாநாயக்க, பொருளாதாரம் மிகவும் அதலபாதாளத்தில் இருக்கும் இவ்வேளையில், சீர்திருத்தங்களை ஏற்படுத்த இதுவே சிறந்த தருணம் என சுட்டிக்காட்டினார்.

அதன்படி, தனிநபர் வருமான வரி அடுத்த ஆண்டு முதல் அமலுக்கும்.

• ரூ.100,000 மாதச் சம்பளம் உள்ளவருக்கு வருமான வரி இல்லை.
• வருமான வரி ரூ. 3,500 மாதச் சம்பளம் ரூ. 150,000 உள்ளவருக்கு
• வருமான வரி ரூ. 10,500 மாத சம்பளம் ரூ. 200,000
• வருமான வரி ரூ. 21,000 மாத சம்பளம் ரூ. 250,000
• வருமான வரி ரூ. 35,000 மாத சம்பளம் ரூ. 300,000
• வருமான வரி ரூ. 52,000 மாத சம்பளம் ரூ. 350,000
• வருமான வரி ரூ. 70,500 மாத சம்பளம் ரூ. 400,000
• வருமான வரி ரூ. 106,500 மாத சம்பளம் ரூ. 500,000
• வருமான வரி ரூ. 196,500 மாத சம்பளம் ரூ. 750,000
• வருமான வரி ரூ. 286,500 மாத சம்பளம் ரூ. 1 மில்லியன்

இதேவேளை, ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன, நாட்டின் நிதி நிலைமையின் தீவிரத்தை மீண்டும் வலியுறுத்தினார்.

அரசாங்கம் வருவாயை அதிகரிப்பதற்கும் செலவினங்களைக் குறைப்பதற்கும் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளதாக சிறிவர்தன குறிப்பிட்டார்.

நெருக்கடியான சூழ்நிலையில், ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களைக் கவனிப்பதற்காக அரசாங்கம் பெரும் செலவைச் செய்ய வேண்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நிஷாந்த ஜெயவீர எம்பியாக சத்தியபிரமாணம்

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட நிஷாந்த...

உள்ளூர் வாகனச் சந்தையில் பாரிய விலை உயர்வு?

வாகன இறக்குமதிக்காக அரசாங்கம் முன்னதாகவே ஒதுக்கிய 200 மில்லியன் அமெரிக்க டொலரை...

டிஜிட்டல் சேவைகள் 18% பெறுமதி சேர் வரிக்கு சஜித் எதிர்ப்பு

ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் டிஜிட்டல் சேவைகள் மீது அரசாங்கம் 18%...

விமலுக்கு CID அழைப்பு

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்சவை நாளை...