ஜனாதிபதி தேர்தல் போட்டி! ரணிலின் உறுதியற்ற பதில்

Date:

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என தாம் எங்கும் அறிவிக்கவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆளும் கட்சியின் பலமானவர்கள் குழுவுடன் தெரிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நத்தார் பண்டிகையை முன்னிட்டு அமைச்சர்கள் குழுவுடனான கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

“நீங்கள், இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்கு வரமாட்டீர்கள் என்று சிலர் கூறுகின்றனர். இது உண்மையா? இல்லை?” என்று அமைச்சர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, “இன்னும் வருகிறேன் என்று சொல்லவில்லை, வரவில்லை என்றும் சொல்லவில்லை” என தெரிவித்துள்ளார்.

இருப்பினும், நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப இன்னும் நிறைய பணிகள் செய்ய வேண்டியுள்ளது” என்றார்.

கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை பூர்த்தி செய்து புதிய பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும் என கூறியுள்ள ஜனாதிபதி, அதற்கு கால அவகாசம் தேவைப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இன்றைய வானிலை

நாடு முழுவதும் வடகீழ் பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாக, வளிமண்டலவியல் திணைக்களம்...

பாரிய அளவு நிதி அனுப்பும் வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள்

‘இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும்’ நிதியம் இதுவரை வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களிடமிருந்து கிட்டத்தட்ட...

இந்த வரவு செலவு திட்டம் வேண்டாம்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, தற்போதுள்ள வரவு செலவுத் திட்டங்களைத் திருத்தி,...

சாரதி அனுமதிப்பத்திரக் கணினி முறைமை மீண்டும் சேவையில்

சீரற்ற வானிலை காரணமாக தடைப்பட்டிருந்த மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் சாரதி அனுமதிப்பத்திரக்...