மன்மோகன் சிங்குக்கு இறுதி அஞ்சலி செலுத்திய ரணில்

Date:

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,

இன்று (27) புதுடில்லியில் இறுதி அஞ்சலி செலுத்தினார்.

அத்துடன், மன்மோகன் சிங்கின் மனைவி குர்ஷரன் கவுர் கோஹ்லிக்கும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது இரங்கலைத் தெரிவித்துக்கொண்டார்.

புதுடில்லியில் உள்ள மன்மோகன் சிங்கின் இல்லத்துக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காகச் சென்றிருந்த ரணில் விக்கிரமசிங்க, அங்கு வருகை தந்திருந்த இந்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியுடனும் சிறிது நேரம் கலந்துரையாடினார்.

இந்நாட்களில் இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ரணில் விக்கிரமசிங்க, இந்தியாவின் முன்னாள் பிரதமரின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காகவும் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தவறான தகவல்களை மறுத்து சம்பத் வங்கி விளக்கம்

Lanka News Web எனும் டிஜிட்டல் செய்தி தளத்தில் வெளியிடப்பட்ட குற்றச்சாட்டுகளைத்...

வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இராஜினாமா

நிலக்கரி இறக்குமதி தொடர்பான செயல்முறையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி விசாரணை...

சம்பத் வங்கி பற்றிய சந்தேகங்கள் அதிகரிப்பு!

இலங்கையின் வங்கித் துறையில் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ள ரூ. 13.5 பில்லியன்...

இந்திய துணை ஜனாதிபதி நாளை மறுநாள் இலங்கை வருகிறார்

இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் 2 நாள் அரசு முறை பயணமாக...