இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து போராட்டம்

0
220

இந்திய மீனவர்களின் அத்துமீறலைக. கண்டித்து
யாழ்ப்பாணம் மயிலிட்டிப்  பகுதியில்  இன்று போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

வலிகாமம் வடக்கு மீனவர் சமாசம் மற்றும் மயிலிட்டி கடற்றொழிலாளர் சங்கங்களின் ஏற்பாட்டில் இன்று காலை 10 மணியளவில் மயிலிட்டி துறைமுகத்தில் ஒன்றுகூடிய மீனவர்கள்  இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்துமீறுகின்ற இந்திய மீனவர்களை கைது செய், கைது செய்கின்ற படகுகளை அரசுடைமையாக்கு போன்ற கோஷங்களை போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள்  எழுப்பினர்.

இதன்போது கொட்டும் மழையிலும் கடற் தொழிலாளர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here