பல மின் உற்பத்தி நிலையங்களில் எரிபொருள் இருப்பு ஒரு சில நாட்களுக்கு மட்டுமே

Date:

பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் கூற்றுப்படி, டீசல் மற்றும் எரிபொருள் எண்ணெயைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் பல மின் உற்பத்தி நிலையங்களின் எரிபொருள் இருப்பு ஒரு சில நாட்களுக்கு மட்டுமே போதுமான அளவு குறைந்துள்ளது.

மேற்படி ஆணைக்குழு நேற்று (01) வெளியிட்ட குறிப்பின்படி, சோஜிட்ஸ் ஆலை மற்றும் மாத்தறை ஏஸ் ஆலைக்கு சொந்தமான எரிபொருள் இருப்புக்கள் நேற்றைய தினம் ஏற்கனவே தீர்ந்துவிட்டன.

மேலும் பல மின் உற்பத்தி நிலையங்களில் இன்று எரிபொருள் தீர்ந்து போகவுள்ளதுடன் சபுகஸ்கந்த ஏ, சபுகஸ்கந்த பி மற்றும் பார்ஜ் ஆகியவற்றில் மாத்திரமே இன்னும் மூன்று நாட்களுக்கு போதுமான எரிபொருள் உள்ளது.

நொரோச்சோலை நிலக்கரியில் இயங்கும் அனல்மின்நிலையத்தில் வரும் அக்டோபர் வரை போதுமான நிலக்கரி இருப்பு உள்ளது, ஆனால் ஆலையின் மூன்று ஜெனரேட்டர்களில் ஒன்று அத்தியாவசிய பராமரிப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளதால், கொள்ளளவு 540 மெகாவாட்டாக குறைந்துள்ளது.

அதன்படி, இன்று ஐஓசி நிறுவனத்திடம் இருந்து டீசல் கையிருப்பு பெற முடிந்தால் மட்டுமே பெரும் மின்வெட்டைத் தவிர்க்க முடியும் என அந்தத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எடுத்துள்ள முடிவு

பல கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் திங்கட்கிழமை (25) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட அரச...

பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கள மாவத்தையில் நடந்து சென்ற இருவர் மீது இன்று...

ரணில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிகிச்சைக்காக...

ரணில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றம்

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இன்று (23)...