புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கு தேவையான நடைமுறைகள் பாராளுமன்றத்தின் ஊடாக

Date:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளை (13) பதவி விலகியதன் பின்னர், புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கு தேவையான நடைமுறைகளை பாராளுமன்றத்தின் ஊடாக அமுல்படுத்துவதற்கு பாராளுமன்றத்தின் கட்சித் தலைவர்கள் திகதி நிர்ணயித்துள்ளனர்.

இதன்படி ஜனாதிபதி ஒருவர் பதவி விலகும் போது மூன்று நாட்களுக்குள் பாராளுமன்றம் கூட்டப்பட்டு அறிவிக்கப்பட வேண்டும் எனவே எதிர்வரும் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜனாதிபதி பதவி விலகியதாக பாராளுமன்றம் கூட்டப்பட்டு வேட்புமனுக்கள் கோரப்படும்.

புதிய ஜனாதிபதிக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் 18ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதுடன், எதிர்வரும் ஜூலை மாதம் 20ஆம் திகதி நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தி புதிய ஜனாதிபதியை தெரிவு செய்ய கட்சித் தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று (11) நடைபெற்ற விசேட கட்சித் தலைவர்கள்

கூட்டத்திலேயே அவர்கள் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளனர்

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இதுவரை 37 மனித எலும்புக்கூடுகள் மீட்பு

செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 37 மனித...

எஸ்.எம். சந்திரசேன விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு விளக்கமறியல் 2015 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ரூ....

மருந்து உற்பத்தி துறையில் புரட்சிகர மாற்றம்!

100 சதவீதம் இலங்கைக்குச் சொந்தமான மருந்து உற்பத்தி நிறுவனமான சினெர்ஜி பார்மாசூட்டிகல்ஸ்,...

மருத்துவமனைகளும் உணவகங்களும் தொற்றா நோய்கள் பரவும் மையங்களாக மாறிவிட்டன!

உணவுக் கட்டுப்பாட்டு வர்த்தமானிகளில் தாமதம் ஏற்படுவதால் பொது சுகாதாரம் ஆபத்தில் உள்ளது....