சிங்கப்பூர் செல்ல தனிப்பட்ட விமானம் மாலைத்தீவு வந்தது

0
122

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சிங்கப்பூர் செல்வதற்காக மாலத்தீவில் உள்ள மாலே விமான நிலையத்தில் தனிப்பட்ட விமானம் ஒன்று தரையிறக்கியுள்ளது.

ஜனாதிபதியுடன் அவரது மனைவி அயோமா ராஜபக்ஷ மற்றும் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் சிங்கப்பூர் செல்லவுள்ளனர்.

அவர்கள் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் சிங்கப்பூர் செல்ல திட்டமிட்டிருந்தனர், ஆனால் பாதுகாப்பு காரணங்களால் அந்த திட்டம் ரத்து செய்யப்பட்டது.

இதன்படி மாலைதீவில் இருந்து புறப்பட மாலத்தீவு அதிகாரிகளிடம் தனி விமானம் கோரப்பட்டு, சிறிது நேரத்திற்கு முன்னர் அந்த விமானம் மாலே விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

இன்று பிற்பகல் சிங்கப்பூர் சென்றடைந்த பின்னர் ஜனாதிபதி தனது இராஜினாமா அறிவிப்பை வெளியிட உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here