டல்லாஸ் ஜனாதிபதியாக வருவதற்கு தேவையான வாக்குகளை விட இருபது வாக்குகள் அதிகம்

Date:

டலஸ் அழகப்பெரும இந்த நாட்டின் ஜனாதிபதியாக வருவதற்கு தேவையான வாக்குகளை விட இருபது வாக்குகள் அதிகம் என நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழில் வல்லுனர்களும் புதிய பாராளுமன்ற உறுப்பினர்களும் .டலஸ் அழகப்பெருமவுக்கு வாக்களிக்க இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மோசடி மற்றும் ஊழலற்ற ஒருவரையே நாட்டை வழி நடத்துவதற்கு நாடு கோருவதாகத் தெரிவித்த அவர .டலஸ் அழகப்பெரும அத்தகைய பண்புகளைக் கொண்டவர் எனவும் தெரிவித்தார்.

ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் அடுத்த ஒன்றரை வருடங்களில் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை கொண்டு வருவதற்கான திட்டங்களை அழபெரும வெளிப்படுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கெஹேலியாவின் மூத்த மகள் மீண்டும் கைது

முன்னாள் அமைச்சர் கெஹேலியா ரம்புக்வெல்லாவின் மூத்த மகள் சமித்த்ரி ரம்புக்வெல்லா, லஞ்சம்...

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்ய தனிநபர் பிரேரணை

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்வதற்கான யோசனைகள் அடங்கிய தனிநபர் பிரேரணையொன்று...

விளையாட்டு அமைச்சின் பெயரில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெயரில் மோசடி

இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சின் பெயரை தவறாக பயன்படுத்தி, வெளிநாட்டு வேலை...

ஜனாதிபதி அனுரவுக்கு நன்றி தெரிவித்தார் மோடி!

கொழும்பு கங்காராமய விகாரையில் புனித தேவ்னிமோரி (Devnimori) அவசரங்களின் (Relics) திருக்காட்சியை...