இலங்கைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க ஐரோப்பிய ஒன்றியம் ஜனாதிபதியுடன் இணக்கம்

Date:

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்கள் சிலர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளனர்.

இந்த சவாலான காலப்பகுதியில் இலங்கையின் பங்குதாரராக தாம் இணைந்திருப்பதாக ட்விட்டர் பதிவொன்றின் மூலம் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

சிவில் மற்றும் மனித உரிமைகளை பாதுகாப்பதுடன் கருத்துச் சுதந்திரம் மற்றும் ஆர்ப்பாட்டம் செய்வதற்குள்ள உரிமை மிக முக்கியமானது என்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இலங்கை மீண்டும் சிறந்த பயணத்தை நோக்கி முன்னேற ஒன்றிணைந்த வேலைத்திட்டம் அவசியம் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வௌிநாட்டு அலுவல்கள் தொடர்பாக தற்போது நடைமுறையிலுள்ள மூன்று விடயங்கள் குறித்து விசேட கவனம் செலுத்துமாறு ஜனாதிபதியிடம் தாம் தெரிவித்ததாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

GSP+, IMF மற்றும் மனித உரிமை பேரவை தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு தூதுவர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்ததாக இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

யாழ்ப்பாணத்தில் துப்பாக்கிச் சூடு

யாழ்ப்பாணம், தென்மராட்சி, கச்சாய் துறைமுகப் பகுதியில் நேற்று (24) இரவு 7:30...

இன்றைய வானிலை நிலவரம்

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும்...

ஜகத் விதானவுக்கு கொலை மிரட்டல்

சமகி ஜன பலவேகய களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான...

பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் நிச்சயமாக தூக்கிலிடப்பட வேண்டும்!

சிறைச்சாலைகளில் உள்ள தூக்கிலிடப்பட வேண்டியவர்களின் பட்டியலில் 5 பாடசாலை மாணவர்களும் உள்ளதாக...