எரிபொருள் கொள்வனவு செய்வதில் பாரிய மோசடி ஒன்று இந்த நாட்டில் இடம்பெற்று வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிடுகின்றார்.
ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளை வாங்குவதாகவும், துபாயில் நிறுவப்பட்ட நிறுவனத்திடம் இருந்து தரம் குறைந்த கச்சா எண்ணெயை வாங்குவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிடுகின்றார்.
இந்த
கச்சா எண்ணெயை ஒரு பேரல் 35-50 டொலர்களுக்கு கொள்வனவு செய்யக்கூடிய நிலையில், 117 டொலர்களுக்கு கொள்வனவு செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.