பாதாளக் குழு ரௌடிகளுக்கு அஜித் ரோஹண விடுத்துள்ள சவால்!

Date:

தென் மாகாணத்தில் கடந்த சில மாதங்களாக இடம்பெற்ற கொலைகள் மற்றும் குற்றச் செயல்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சந்தேக நபர்கள் பலர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தென் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்படும் என பிரதி பொலிஸ் மா அதிபர் வலியுறுத்தியுள்ளார்.

156வது பொலிஸ் தினத்தை முன்னிட்டு நேற்று (10) இடம்பெற்ற தென் மாகாண பிரதான நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அஜித் ரோஹண இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் தென் மாகாணத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அவற்றில் 04 சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

எஞ்சியுள்ள சம்பவங்களுடன் தொடர்புடையவர்களும் உடனடியாகக் கைது செய்யப்படுவார்கள் எனக் குறிப்பிடும் அஜித் ரோஹண, குற்றச் செயல்களில் ஈடுபட்டு சட்டத்தில் இருந்து தப்பலாம் என நினைத்தால் அதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை எனவும் தெரிவித்தார்.

இன்னும் 06 வாரங்கள் கடக்கும் போது குற்றவாளிகளா அல்லது பொலிஸாரா வெற்றி பெறுவார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் என அஜித் ரோஹண கூறுகிறார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இலங்கையின் கோரிக்கைக்கு IMF முன்னுரிமை

'திட்வா' புயலால் ஏற்பட்ட அழிவைத் தொடர்ந்து ஏற்பட்ட சவால்களை எதிர்கொள்வதற்காக, அவசர...

முட்டை விலை 70 வரை உயரும்

பேரிடர் காரணமாக கால்நடை பண்ணைகளுக்கு ஏற்பட்ட சேதத்துடன், ஒரு முட்டையின் விலை...

தமிழக முதல்வர், மக்களுக்கு இலங்கை மக்கள் சார்பாக செந்தில் தொண்டமான் நன்றி

இலங்கையில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப்...

தெஹிவளையில் ஒருவர் சுட்டுக் கொலை

தெஹிவளை பொலிஸ் பிரிவில் உள்ள ஏ குவார்ட்டர்ஸ் விளையாட்டு மைதானத்திற்கு அருகில்...