தேர்தல் முறையில் மாற்றம் கொண்டுவர ரணிலுக்கு மக்கள் பலம் இல்லை

Date:

ரணில் விக்கிரமசிங்க தற்போது இடைக்கால ஜனாதிபதியாக செயற்படுவதாகவும், அவரது எண்ணங்களையும் விருப்பங்களையும் கொள்கைகளாக அமுல்படுத்துவதல்ல, அன்றாட விடயங்களை ஒழுங்காக நடத்துவதே அவரது பணியாக இருக்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.

தேர்தல் முறைமையை மாற்றுவது தொடர்பில் ஜனாதிபதியின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அதற்கான ஆணை அவருக்கு கிடைக்கவில்லை எனவும் ஹேரத் குறிப்பிடுகின்றார்.

ஒரு நாடு தொடர்பான தீர்மானங்களை எடுப்பதில் வரைமுறை இருப்பதால், அதற்கேற்ப செயல்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் இரண்டு வாக்குச் சீட்டுகள் இருப்பதாகவும் ஒன்று நிறைவேற்று ஜனாதிபதிக்கும் மற்றொன்று சட்டவாக்க அதிகாரம் என்றும் கூறப்பட்டது.

ஆனால் இன்று திரிபுபடுத்தப்பட்ட நிலைமையாக இருப்பதால் மிகவும் கவனமாக செயற்பட வேண்டும் என அவர் கூறுகிறார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

6வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் DP Education

இலங்கையின் முன்னணி ஆன்லைன் கல்வி தளமான DP Education, இன்று (அக்டோபர்...

மதுக்கடைகளுக்கு பூட்டு

தீபாவளி தினத்தன்று வட மாகாணத்திலுள்ள அனைத்து மதுபான சாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியிடம்...

முதலாளிமார் சம்மேளனத்தை வன்மையாக கண்டிக்கும் செந்தில் தொண்டமான்!

இன்று தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான பேச்சுவார்த்தை சம்பள நிர்ணய...

தங்கம் விலை நிலவரம்

இலங்கை வரலாற்றில் 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று...