யானை தாக்கி பெண் பலியானதால் பிரதேசவாசிகள் தாக்கி பொலிஸ் உத்தியோகத்தர் பலி!!

Date:

அநுராதபுரம் கெப்பத்திகொல்லேவ பகுதியில் பொலீஸ் அதிகாரி ஒருவரை கிராம மக்கள் பொல்லால் அடித்துக் கொன்றனர்.

நேற்று பிற்பகல், கபிதிகொல்லேவ, ரம்பகேபூவெவ பகுதியில் வைத்து தாக்கப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழந்துள்ளார்.

வாரியபொல பிரதேசத்தில் வசிக்கும் 54 வயதுடைய இவரின் சடலம் மதவாச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

நேற்று மதியம் காட்டு யானை தாக்கியதில் உள்ளூர் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், பிரதேசவாசிகள் வீதியைக் மறித்து செய்த போராட்டத்தை கட்டுப்படுத்தச் சென்ற போது, ​​பொலிஸ் பரிசோதகர் மற்றும் மேலும் இரு உத்தியோகத்தர்கள் மீது பொல்லால் தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலுக்கு உள்ளான பொலிஸ் அதிகாரியை காப்பாற்ற வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக பொலீசார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பிக்கு உட்பட நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மீன்பிடி படகுகளுக்கு எரிபொருள் மானியம்

மீன்பிடி படகுகளுக்கு எரிபொருள் மானியம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.  இதன்படி, சிறிய...

Lucky Baskhar திரில்லர் திரைப்படமும் NDB நிதி மோசடியும்!

தேசிய அபிவிருத்தி வங்கி National Development Bank (NDB) வெளியிட்டுள்ள தகவலின்படி,...

இந்தியத் துணை ஜனாதிபதி இலங்கை வருகிறார்

இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை...

புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு போக்குவரத்து சேவை

புத்தாண்டை முன்னிட்டு கிராமங்களுக்கு பயணம் செய்யும் மக்களுக்காக சிறப்பு போக்குவரத்து சேவைகளை...