அடுத்த ஆண்டு பொருளாதாரம் ஸ்திரமடைபியும் – நந்தலால்

Date:

2023ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதாரம் மீளும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியை சமாளிப்பது குறித்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வொன்று கொழும்பில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

2019ஆம் ஆண்டின் ஸ்திரத்தன்மைக்கு நிகரான நிலைக்கு 2023 இல் பொருளாதாரம் கட்டியெழுப்பப்படும் என்றும் மத்திய வங்கியின் ஆளுநர் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், அடுத்த ஆண்டு நாட்டை மீட்டெடுக்கும் ஆண்டாக இருக்கும் என்றும், குறைந்த பணவீக்கம், அதிக வளப் பயன்பாடு மற்றும் ஸ்திரத்தன்மையுடன் பொருளாதாரம் கட்டியெழுப்பப்படும் என்றும் ஆளுநர் கூறினார்.

வளங்களை கட்டியெழுப்புவது இலங்கைக்கு கடினமான பணியாக இருந்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் மேலும் தெரிவித்தார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

யார் என்ன சொன்னாலும் கொள்கை முடிவில் மாற்றம் இல்லை – லால்காந்த

ஒவ்வொரு முறையும் பொருத்தமான வழிமுறையின்படி எரிபொருள் விலைகள் குறைக்கப்படுகின்றன அல்லது அதிகரிக்கப்படுகின்றன...

எஸ்.எம் சந்திரசேன கைது

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன கைது செய்துள்ளப்பட்டுள்ளார். இன்று (04) முற்பகல் இலஞ்ச...

மேர்வின் பிணையில் விடுதலை

கிரிபத்கொட நகரில் அரசாங்க நிலத்தை மோசடியாக விற்பனை செய்ததாக கூறப்படும் வழக்கில்...

எம்பி இராமநாதன் அர்ச்சுனா குறித்து நீதிமன்றம் விடுத்த அறிவிப்பு

யாழ்ப்பாண மாவட்ட சுயேச்சை  பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா,  பாராளுமன்ற உறுப்பினராக...