அடுத்த ஆண்டு பொருளாதாரம் ஸ்திரமடைபியும் – நந்தலால்

Date:

2023ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதாரம் மீளும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியை சமாளிப்பது குறித்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வொன்று கொழும்பில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

2019ஆம் ஆண்டின் ஸ்திரத்தன்மைக்கு நிகரான நிலைக்கு 2023 இல் பொருளாதாரம் கட்டியெழுப்பப்படும் என்றும் மத்திய வங்கியின் ஆளுநர் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், அடுத்த ஆண்டு நாட்டை மீட்டெடுக்கும் ஆண்டாக இருக்கும் என்றும், குறைந்த பணவீக்கம், அதிக வளப் பயன்பாடு மற்றும் ஸ்திரத்தன்மையுடன் பொருளாதாரம் கட்டியெழுப்பப்படும் என்றும் ஆளுநர் கூறினார்.

வளங்களை கட்டியெழுப்புவது இலங்கைக்கு கடினமான பணியாக இருந்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் மேலும் தெரிவித்தார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வரவு செலவுத் திட்டம் முழுக்க முழுக்க பொய்

சமர்ப்பிக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டம் சமூக யதார்த்தத்தை புரிந்து கொண்டு முன்வைக்கப்பட்டதொரு வரவுசெலவுத்...

கொட்டாஞ்சேனையில் ஒருவர் சுட்டுக் கொலை!

கொழும்பு, கொட்டாஞ்சேனை 16வது லேன் பகுதியில் நேற்று (07) இரவு துப்பாக்கிச்...

வரவு செலவுத் திட்டத்தில் மலையகத்திற்கான திட்டங்கள் வரவேற்கத்தக்கது!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில்...

ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமேவாக பிரதீப் நிலங்க தெலே மீண்டும் தெரிவு

கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமேவாக...