குடாநாட்டிலும் பெரும் சேதங்கள்!

Date:

‘மாண்டஸ்’ புயலின் தாக்கம் வடக்கு, கிழக்கில் அதிக பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளன. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வீசிய அதிக காற்றின் காரணமாக பாரிய மரங்கள் பல சாய்ந்து வீழ்ந்துள்ளதோடு சில வீடுகளும் சேதமடைந்துள்ளன.

நேற்றிரவு யாழ். குடாநாட்டிலும் அதிக மழையுடன் கடும் குளிர் நிலவிய அதேநேரம் அதிக காற்றும் வீசியது.

இதன் காரணமாகப் பல இடங்களில் வீடுகளிலும், வீதிகளிலும் பெருமளவு மரங்கள் அடியோடு சாய்ந்து வீழ்ந்தன. இதனால் பல மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன் போக்குவரத்துக்களும் பாதிக்கப்பட்டன.

ஊர்காவற்றுறை மற்றும் காரைநகரில் இரு பனை மரங்கள் வீடுகளின் மீது வீழ்ந்தமையால் இரு வீடுகளும் சேதமடைந்தன.

இதேபோன்று மருதங்கேணி – வத்திராயனில் ஒரு பனை முறிந்து வீதியில் வீழ்ந்தமையால் சில வீடுகளுக்கான மின்சாரம் முற்றாகத் தடைப்பட்டது.

இதேநேரம் யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட இடங்களில் பெரிய மரங்கள் அடியோடு சாய்ந்து வீதியில் வீழ்ந்தன.

வீதியில் வீழ்ந்த மரங்கள் யாழ்ப்பாணம் மாநகர சபையின் பணியாளர்களால் இன்று பகல் அகற்றப்பட்டன.

இதேவேளை, கரவெட்டி, மருதங்கேணி, பருத்தித்துறை பிரதேசங்களிலும் சேதங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சீரற்ற காலநிலையால் யாழ்ப்பாணத்திலிருந்து தீவகங்களுக்கான படகு சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எரிபொருள் விலை உயர்வு

இன்று (30) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம்...

கொள்கலன் விடுவிப்பு தொடர்பில் அதிர்ச்சி தகவல்!

சுங்க பரிசோதனையின்றி கொள்கலன் ஏற்றுமதிகளை விடுவிப்பது தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஜனாதிபதியால்...

2 மாதங்களில் 23 பில்லியன் பெறுமதி போதைப் பொருட்கள் கைப்பற்றல்

நீண்ட நாள் மீன்பிடி படகுகள் ஊடாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 23 பில்லியன்...

இன்றைய வானிலை அறிவிப்பு

இன்றையதினம் (30) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா,...