இந்த வருடம் இறுதிக்குள் இலங்கைக்கு IMF கடன் கிடைக்காது!

0
300

இந்த வருட இறுதிக்குள் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள 2.9 பில்லியன் டொலர் கடனுக்கு சர்வதேச நாணய நிதியம் அங்கீகாரம் வழங்காது என ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, ராய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், நிறைவேற்று சபையினால் இந்த கடன் வசதிக்கு ஒப்புதல் அளிக்கும் திகதி குறித்து குறிப்பிட்டு எதையும் கூற முடியாது என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் இலங்கைக்கு 2.9 பில்லியன் டொலர் கடனுதவி வழங்குவதற்கு இரு தரப்பும் இணக்கம் தெரிவித்ததுடன், இந்த வருட இறுதியில் கடன் வசதி கிடைக்கும் என இலங்கை நம்பியுள்ளது.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here