தினேஷ் ஷாப்டர் கொலைச் சம்பவம் ; இதுவரை 23 பேரிடம் வாக்குமூலம் பதிவு

Date:

ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டர் கொலைச் சம்பவம் தொடர்பில் மொத்தம் 23 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இன்று தெரிவித்துள்ளார்.

பொரளை பொலிஸார் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களம் (CID) இணைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

விசாரணையாளர்களிடம் வாக்குமூலம் அளித்தவர்களில் ஷாப்டரின் மனைவி, குடும்ப உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரையன் தாமஸ் ஆகியோரும் அடங்குவர்.

இதேவேளை, கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவல வழங்கிய உத்தரவுக்கு அமைய பிரையன் தோமஸின் வெளிநாட்டு பயணங்கள் நேற்றுமுதல் தடை செய்யப்பட்டன. இதற்கிடையில், தாமஸின் மொபைல் போன் சிஐடி காவலில் எடுக்கப்பட்டுள்ளது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இந்தியா–பாகிஸ்தான் உறவுகளை மீண்டும் தொடங்க இலங்கை மத்தியஸ்தம்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான இருதரப்பு உறவுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்காக இலங்கையை...

மகத்தான விரதமான மகா சிவராத்திரி இன்று

இந்து தர்மத்தில் சிவபெருமானுக்குரிய முக்கிய விரதங்களில் மிகவும் மகத்தான விரதமாக மகா...

ஜிந்துப்பிட்டியில் மீண்டும் ஒருவர் சுட்டுக் கொலை

கொழும்பு - ஜிந்துப்பிட்டிய பகுதியில் இன்று (14) இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச்...

ஏன் இந்த இராஜினாமா?

கொழும்பு துறைமுகத்தில் இருந்து 323 கொள்கலன்கள் கட்டாய பௌதீக ஆய்வுக்கு உட்படுத்தப்படாமல்...