முதலில் ஜனாதிபதி தேர்தல்தான் நாட்டில் நடைபெறும் ; இடம்பெறும் இரகசிய காய்நகர்தல்!

Date:

உள்ளூராட்சி தேர்தல், மாகாண சபை அல்லது பாராளுமன்றத் தேர்தல்களுக்கு முன்னதாக ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதற்குக் காரணம் நாட்டின் தற்போதைய நிலவரத்தின் அடிப்படையில் ஜனாதிபதித் தேர்தல் ஓரளவுக்கு சாதகமாக அமையலாம் என்ற மதிப்பீடுதான்.

எந்தவொரு தேர்தலுக்கும் முன்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஐக்கிய தேசியக் கட்சியுடன் புதிய கூட்டணியை அமைத்து ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் களமிறங்குமென அரசியல் ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

பொருளாதார மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஒத்திவைக்கப்படும் என ஏற்கனவே செய்திகள் வெளியாகியுள்ளன.

பொதுஜன பெரமுன ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டணியின் பொது வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க களமிறக்கப்படும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சுரேஷ் சலே தொடர்ந்தும் தடுப்புக் காவலில்

முன்னாள் அரச புலனாய்வு சேவையின் தலைவர் சுரேஷ் சலே தொடர்பான வழக்கை...

இறக்குமதி பால் மா விலை உயர்வு

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலை...

விமல் இன்று கைதாகக் கூடும்

பாராளுமன்றம் அருகில் அமைந்துள்ள ரணவிரு நினைவுச்சின்னம் அருகே நேற்று முன்தினம் (18)...

வரி உயர்வதற்கு முதல் நாள் 4000 வாகனங்கள் இறக்குமதி? பல கோடி மோசடி

வாகன இறக்குமதியில் சுங்க இறக்குமதி வரியை 50% உயர்த்தும் வர்த்தமானி அறிவிப்பு...