பேராதனை பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் தொழிற்சங்க போராட்டம் கைவிடப்பட்டது

Date:

பேராதனை கலை பீட ஆசிரியர் சங்கம் (PAFTA) அறிவித்திருந்த வேலைநிறுத்தம் இன்றுடன் (டிச.19) முடிவடைகிறது.

அதன்படி இன்று முதல் பல்கலைக்கழகத்தில் கற்பித்தல் நடவடிக்கைகள் வழமை போன்று நடைபெறும் என கலை பீட ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

மாணவர்கள் குழு தாக்கிய சம்பவத்தைத் தொடர்ந்து, பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பாக இல்லை என்று கூறி, தேர்வு தொடர்பான அனைத்து செயல்பாடுகள் உட்பட அனைத்துப் பணிகளையும் முழுமையாகப் புறக்கணிப்பதாக கலை பீட ஆசிரியர் சங்கம் டிசம்பர் 14 முதல் 18 வரை ஐந்து நாள் வேலைநிறுத்தத்தை முன்னெடுத்தத.

எனவே, இந்த வேலைநிறுத்தம் மாணவர்கள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுப்பதைத் தடுப்பதற்கும், மாணவர்கள், ஊழியர்கள் மற்றும் பல்கலைக்கழக சொத்துக்களைப் பாதுகாப்பது சம்பந்தப்பட்ட நிர்வாகங்களின் முன்னுரிமையாக இருப்பதை உறுதி செய்வதற்கான முதல் படியாக இருக்கும் என்று கலை பீட ஆசிரியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, முன்னாள் துணைவேந்தர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரை 12 பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எம்பிக்களுக்கான மேலும் ஒரு சலுகை ரத்து

பாராளுமன்ற உறுப்பினர்களால் “வியத்புர” வீட்டுத்திட்டத்தில் வீடுகளைக் கொள்வனவு செய்யும் போது வழங்கப்பட்டுள்ள...

அச்சத்தில் கோயில் கோயிலாக செல்லும் அரசியல்வாதிகள்!

தற்போதைய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதாள உலக எதிர்ப்பு நடவடிக்கையின் போது...

31 கோடி பெறுமதி போதை பொருட்கள் மீட்பு

சீதுவ பகுதியில் உள்ள ஒரு தனியார் அஞ்சல் சேவை நிலையத்தில் சுங்க...

மாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூடு

மாளிகாவத்தை ஜும்மா மஸ்ஜித் சாலையில், ஒரு வணிக இடத்தில் இருந்த இளைஞனை...