மட்டக்களப்பில் மனைவியை கொலை செய்த கணவன்!

Date:

மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள கருப்பிடமலை – நெவுண்டலியமடு வயல் பிரதேசத்தில் மது போதையில் மனைவியைக் கணவன் மண்வெட்டிப் பிடியால் அடித்துப் படுகொலை செய்துள்ளார்.

கரடியன்குளத்தைச் சேர்ந்த 28 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயாரான ஜெயக்குமார் புவனேஸ்வரி என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்றிரவு இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் கொலையாளியான  35 வயதுடைய வல்லிபுரம் ஜெயக்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கரடியனாறுப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வத்திக்கான் வெளியுறவு அமைச்சர் இலங்கை வருகிறார்

வத்திக்கான்  வெளியுறவு அமைச்சர் பேராயர் பால் ரிச்சர்ட் கல்லாகர்  எதிர்வரும் நவம்பர்...

பத்மேவுடன் தொடர்பு – ஐந்து நடிகைகளுக்கு சிக்கல்

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேகநபரான கெஹெல்பததர பத்மே உடன் வெளிநாடுகளுக்குச்...

இலங்கை பெண்கள் நால்வர் சடலங்களாக மீட்பு

சென்னை எண்ணூர் பெரிய குப்பம் கடற்கரையில் நான்கு பெண்களின் சடலங்கள் கரை...

எரிபொருள் விலை மாற்றம்

மாதாந்த எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைய, நேற்று (31) நள்ளிரவு 12.00...