லுணுகலை பிரதேச சபையில் மீண்டும் மலர்ந்தது பொதுஜன பெரமுனவின் ஆட்சி!

Date:

லுணுகலை பிரதேச சபையின் புதிய தவிசாளரை தேர்ந்தெடுக்கும் முகமான வாக்கெடுப்பில் சிறிலங்கா பொது ஜன பெரமுனவை சேர்ந்த ஒருவரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த ஒருவருமாக இருவர் போட்டியிட்டனர். 

இதில் சிறிலங்கா பொது ஜன பெரமுனவை சேர்ந்த L..P.N.U.A.அநுரவிக்ரமதுங்க மேலதிக மூன்று வாக்குகளால் தவிசாளராக இன்றைய தினம் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

இவருக்கு ஆதரவாக ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த 7 உறுப்பினர்களும் சிறிலங்கா பொது ஜன பெரமுனவை சேர்ந்த 3 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

 இவருக்கு கிடைக்கப்பெற்ற மொத்த வாக்குகள் 10ஆகும்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் பிரதிநிதித்துவப் படுத்திய R.W.P.L.U. எட்வின்க்கு கிடைக்கப்பெற்ற மொத்த வாக்குகள் 7ஆகும். 

சிறி லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மூவரும் சிறிலங்கா பொது ஜன பெரமுன உறுப்பினர்கள் இருவரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர்கள் இருவருமாக மொத்தமாக 7 வாக்குகளை இவருக்கு அளித்தனர்.

ஜேவிபி உறுப்பினர் ஒருவரும் மலையக மக்கள் முன்னணியின் உறுப்பினர் ஒருவரும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவை சேர்ந்த நடுநிலை வகித்தமை குறிப்பிடத்தக்கது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஜனாதிபதிக்கு சிறீதரன் எம்.பி அவசர கடிதம்…!

​பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைக் கலைஞர் கணேஸ்குமார்...

சுரேஷ் சலேவுக்கு ஆதரவாக சத்தியாக்கிரகப் போராட்டம் ஆரம்பம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே மனிதாபிமானமற்ற முறையில்...

திட்வா சூறாவளி உதவி நிதி பாதுகாப்பாக உள்ளது

திட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக கிடைத்த நிதியுதவிகள் அரசுக் கருவூலத்தில்...

பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

தெற்கு பிலிப்பைன்ஸின் மிண்டனாவோ பகுதிக்கு அப்பால் இன்று (8) அதிகாலை 7.8...