ருமேனியாவிலிருந்து சட்டவிரோதமாக ஹங்கேரி செல்ல முற்பட்ட இலங்கையர்கள் கைது!

Date:

இலங்கை, பங்களாதேஷ் , எரித்திரியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த சுமார் 27 புலம்பெயர்ந்தோர், துணிகள் மற்றும் உலோகக் கம்பிகள் ஏற்றப்பட்ட இரண்டு டிரக்குகளுக்குள் மறைந்திருந்து, ருமேனியாவில் இருந்து ஹங்கேரிக்கு சட்டவிரோதமாக எல்லையைக் கடக்க முயன்றபோது, ருமேனிய பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Nadlac I Border Crossing Point (PTF) இல் நாட்டை விட்டு வெளியேறவிருந்த ஒரு டிரக் சோதனையின் போது, அது ஒரு ருமேனியரால் இயக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது, மேலும் கடத்தப்பட்ட பொருட்களில் புலம்பெயர்ந்தோர் மறைந்திருந்தனர். இதில் 17 வெளிநாட்டினர் கண்டுபிடிக்கப்பட்டனர்.

குறித்த நபர்கள் பின்னர் அழைத்துச் செல்லப்பட்டு மேலதிக விசாரணைக்காக ருமேனிய அராத் காவல்துறையின் தலைமையகத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு எல்லைப் பொலிசார் அவர்கள் 21 முதல் 67 வயதுடைய இலங்கை , பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் எரித்திரியாவின் குடிமக்கள் என்பதைக் கண்டறிந்தனர்.

இந்த சட்டவிரோத நடவடிக்கை குறித்து மேலதிக தகவல்களை கண்டறிய விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக ருமேனிய எல்லைப் பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.

ஆதாரம்: SchengenVisaInfo.com

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

NDB விவகாரம்: இலங்கை வங்கி சூழலுக்கு கவன எச்சரிக்கை

இலங்கையின் நிதியியல் அமைப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நேஷனல் டெவலப்ப்மென்ட் வங்கி...

மீன்பிடி படகுகளுக்கு எரிபொருள் மானியம்

மீன்பிடி படகுகளுக்கு எரிபொருள் மானியம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.  இதன்படி, சிறிய...

Lucky Baskhar திரில்லர் திரைப்படமும் NDB நிதி மோசடியும்!

தேசிய அபிவிருத்தி வங்கி National Development Bank (NDB) வெளியிட்டுள்ள தகவலின்படி,...

இந்தியத் துணை ஜனாதிபதி இலங்கை வருகிறார்

இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை...