பொங்கல் ஜல்லிக்கட்டு குறித்து செந்தில் தொண்டமான் கருத்து

Date:

பொங்கல் பண்டிகையை ஒட்டி சிவகங்கை அருகே வாடிவாசல் அமைத்து புதுமையான முறையில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழர் திருநாள் நெருங்கி வரும் நிலையில், சிவகங்கை அருகே உள்ள ஆளவிளாம்பட்டியில் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்கம் சார்பில் தென்னத்தோப்பில் காளைகளுக்கும், காளையர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

கலைச்சுழலை காளைகளுக்கு பளக்கும் வகையில் முதல் முறையாக வாடிவாசல் அமைத்து சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

பெருத்த  திமில், பெரிய கொம்புகள், ராஜநடையோடு கம்பிரமாக வளம் வரும் இந்த காளைகள், பிடிக்க வரும் வீரர்களை மிரளவைக்கிறது.

காளைகளை போட்டிக்கு அழைத்து செல்ல குளிரூட்டப்பட்ட வாகனங்களும் தயாராக உள்ளதாக ஜல்லிக்கட்டு நலன்புரிச் சங்கத் தலைவரும் இலங்கை முன்னாள் மாகாண அமைச்சருமான செந்தில் தொண்டைமான் தெரிவித்தார்.

காளையார்க்கும் சிறப்பான பயிற்சி அளிக்கப்பட்டு வருவதால் போட்டிகளில் சிவகங்கை வெற்றி கோடி நாட்டும் என்றும் நம்பிக்கையுடன் மாடுபிடி வீரர்கள் உள்ளனர்.  

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அடுத்த மூன்று ஆண்டுகளில் 13,600 புதிய தாதியர்கள் நியமனம்

இலங்கையின் தாதியர் சேவைக்காக அடுத்த மூன்று ஆண்டுகளில் 13,600 புதிய தாதியர்...

இலங்கையின் ஆடை மற்றும் நெசவுத் துறை ஏற்றுமதி வருவாய் 7.3% வீழ்ச்சி

மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வு திணைக்களம் ஏப்ரல் மாதத்திற்காக வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,...

அரசியல்வாதிகள் திருடவில்லை; அரச சேவையாளர்கள் இன்னும் திருடுகின்றனர்

– அமைச்சர் கே.டி. லால்காந்த தற்போது அரசியல்வாதிகள் ஊழல் அல்லது திருட்டில் ஈடுபடவில்லை...

ராஜாங்கனே சத்தாரதன தேரர் மீது தாக்குதல்

பிக்குத் துறவியிலிருந்து நீக்கப்பட்ட ராஜாங்கனே சத்தாரதன என அழைக்கப்படும் தேரர் மீது...