இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலைகளை குறைக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் டீசலின் விலை 15 ரூபாவினாலும் மண்ணெண்ணெய் 10 ரூபாவினாலும் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 405 ரூபாவாகவும் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் புதிய விலை 355 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சிலோன் இந்தியன் ஆயில் நிறுவனமும் எரிபொருள் விலையை ஒரே நேரத்தில் குறைத்துள்ளது.பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் இல்லை.