அடுத்த சில வருடங்களுக்குள் 13ஐ முழுமையாக அமுல்படுத்த நடவடிக்கை ; ஜனாதிபதி யாழில் உறுதி!

Date:

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை எதிர்வரும் சில வருடங்களுக்குள் முழுமையாக அமுல்படுத்த அரசாங்கம் பரிசீலித்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று (ஜன. 15) நடைபெற்ற தேசிய தைப்பொங்கல் அரச விழாவில் கலந்து கொண்ட அவர், 13ஆவது திருத்தச் சட்டத்தை அடுத்த சில வருடங்களுக்குள் முழுமையாக அமுல்படுத்த நாங்கள் எதிர்பார்த்துள்ளோம்.

இதேவேளை, தைப்பொங்கல் அரச விழாவில் பங்கேற்பதற்காக யாழ்ப்பாணம் சென்றிருந்த ஜனாதிபதி, இன்று (ஜன. 15) காலை யாழ்ப்பாணம் ஸ்ரீ நாக விகாரைக்குச் சென்று சமய நிகழ்வுகளில் ஈடுபட்டு ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நல்லை ஆதீன ஆஸ்ரமதிபதி வணக்கத்திற்குரிய ஸ்ரீ சோமசுந்தரத்தையும் சந்தித்து ஆசிகளைப் பெற்றிருந்தார். யாழ்.ஆயர் அதி வணக்கத்திற்குரிய கலாநிதி ஜஸ்டின் ஞானப்பிரகாசம் அவர்களையும் சென்றடைந்த ஜனாதிபதி சிறு கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சுரேஷ் சாலேவுக்கு திடீர் மாரடைப்பு

முன்னாள் அரச புலனாய்வு சேவைத் தலைவர் சுரேஷ் சாலே திடீர் மாரடைப்பு...

அரசு ஊழியர்களுக்கு தவணை கட்டண முறையில் 20 கிலோ அரிசி!!

அரசு ஊழியர்களுக்கு தவணை கட்டண முறையின் கீழ் 20 கிலோ அரிசி...

ஜனாதிபதி செயலக சிரேஷ்ட உதவிச் செயலாளர் கைது…!

-போலி கடவுச்சீட்டு தயாரித்த குற்றச்சாட்டு: ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் தொடர்புடைய நபர் ஒருவர்...

சரித் அபேசிங்க மீது SJB எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை

இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐக்கிய...