சிஐடிக்கு சென்ற தயாசிறி ; போலி கையெழுத்தை பயன்படுத்தியதாக முறைப்பாடு!

Date:

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தனது போலி கையெழுத்தைப் பயன்படுத்தி உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட முயற்சித்தமை தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (சிஐடி) முறைப்பாடு செய்துள்ளார்.

தெஹிவளை – கல்கிசை மாநகர சபையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கை சின்னத்தில் போட்டியிடுவதற்காக வேட்புமனுக்களை வழங்கியுள்ளதாகவும், போலியான கையொப்பம் இட்டுள்ளதாகவும் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியுள்ளார்.

மேலும், அளிக்கப்பட்ட வேட்புமனுக்கள் போலியான ஆவணங்கள் என்றும், அதில் அவரது போலி கையெழுத்தும் இருப்பதாகவும் அவர் கூறினார்.

தெஹிவளை – கல்கிசை மாநகர சபையின் கீழ் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எந்தவொரு குழுவும் போட்டியிடவில்லை எனத் தெரிவித்த அவர், இவ்வாறான போலிப் போட்டியாளர்களால் ஏமாற வேண்டாம் என பிரதேசவாசிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் இன்று முறைப்பாடு செய்துள்ளார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எல்ல பஸ் விபத்து – சாரதி கைது

நேற்று இரவு எல்ல-வெல்லவாய சாலையில் நடந்த பயங்கர விபத்து, வெல்லவாய நோக்கிச்...

இலங்கை தமிழர்கள் சட்டபூர்வமாக இந்தியாவில் தங்க அனுமதி

இந்தியாவிற்குள் அகதிகளாக நுழைந்த இலங்கை தமிழர்கள் சட்டபூர்வமாக இந்தியாவின் தங்க மத்திய...

நாட்டை சோகத்தில் தள்ளிய எல்ல விபத்து

எல்ல - வெல்லவாய வீதியில் 24வது மைல்கல் அருகில் நேற்று (05)...

எம்பிக்களுக்கான மேலும் ஒரு சலுகை ரத்து

பாராளுமன்ற உறுப்பினர்களால் “வியத்புர” வீட்டுத்திட்டத்தில் வீடுகளைக் கொள்வனவு செய்யும் போது வழங்கப்பட்டுள்ள...