இலங்கைக்கு எரிபொருள் கொள்வனவு செய்ய இந்தியா நிதி உதவி

Date:

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாட்டை தடுக்கும் வகையில் எரிபொருள் கொள்வனவு செய்யவென இந்தியா நிதி உதவி வழங்க முன்வந்துள்ளது.

அதன்படி இலங்கைக்கு LOC திட்டத்தின் கீழ் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்க இந்தியா தீர்மானித்துள்ளது.

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் இந்திய வௌிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருக்கு இடையில் சூம் வழியே இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த நிதி உதவி இலங்கைக்கு கிடைக்கப்பெறுகிறது.

இதற்கு முன்னரும் 900 மில்லியன் அமெரிக்க டொலர் இந்தியாவால் இலங்கைக்கு கடன் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இலங்கையின் கடன் சுமை பாரிய அளவில் அதிகரிப்பு

ரூபாய் மதிப்பு சரிவடைந்ததன் விளைவாக நாட்டின் கடன் சுமை ரூபாய் 1.1...

ரணிலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

அரசு நிதியை தவறாக பயன்படுத்தி லண்டன் நோக்கி தனிப்பட்ட பயணம் மேற்கொண்டதாக...

கட்சியில் இருந்து முழுமையாக விலகுமாறு எரானிடம் SJB கோரிக்கை

இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழுவின் தலைவராக எரான் விக்கிரமரத்ன நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து,...

எரான் தலைமையில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் இடைக்கால நிர்வாகம்

இலங்கை கிரிக்கெட்டில் பரவலான மாற்றங்களை கொண்டு வருவதற்காக விளையாட்டு துறை அமைச்சரினால்...