சமூக ஊடக செயற்பாட்டாளர் தர்ஷன கைது

Date:

பிரபல யூடியூப் சமூக ஊடக செயற்பாட்டாளரான தர்ஷன ஹந்துங்கொட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவர் டுபாயில் இருந்து இலங்கைக்கு வரும்போது கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.

கடந்த போராட்டத்தின் போது தர்ஷன ஹந்துங்கொட அலரி மாளிகைக்குள் அத்துமீறி நுழைய போராட்டக்காரர்களை ஊக்குவித்ததாக சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு பல தடவைகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தார்.

எவ்வாறாயினும், சில வாரங்களுக்கு முன்னர் மீண்டும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்ட போது, ​​அவர் வெளிநாட்டில் இருப்பதாகவும், அது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு கிடைத்த நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் நாடு திரும்புகையில் நேற்று (05) இரவு அவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

லாபத்தில் இயங்கும் கடதாசி தொழிற்சாலை

வாழைச்சேனை காகிதத் தொழிற்சாலை தற்போது லாபம் ஈட்டி வருவதாக கைத்தொழில் மற்றும்...

அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர் கைது

வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் அனுராதபுரம் சிறைச்சாலையில்...

சீமெந்து விலை உயர்வு

50 கிலோகிராம் சீமெந்து மூட்டையின் மொத்த விலையை அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள்...

ஜனாதிபதி பொது மன்னிப்பு குறித்து சிறைச்சாலை திணைக்களம் விளக்கம்

அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிதி மோசடி கைதி ஒருவர் வெசாக்...