தேர்தலை நடத்தப் பணம் வழங்காவிட்டால் மக்களைத் திரட்டி வீதியில் இறங்குவோம்!

Date:

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசு பணம் வழங்காவிட்டால் மக்களைத் திரட்டி வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்தப் போவதாக ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“எப்படியாவது இந்தத் தேர்தலை ஒத்திப்போட வேண்டும் என்பதில் இந்த அரசு குறியாகவே இருக்கின்றது. அதற்காக இதுவரை பல காரணங்களைக் கூறி வந்தது. இறுதியாக பணம் இல்லை என்று கூறி வருகின்றது.

தேவையற்ற விடயங்களுக்கு அதிக பணத்தைச் செலவு செய்கின்றது அரசு. வீண் விரயம் செய்கின்றது. அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரித்து பணத்தை வாரி இறைக்கின்றது.

ஆனால், மக்களின் ஜனநாயக உரிமையான தேர்தலை நடத்துவதற்கு மட்டும் பணம் இல்லையாம். அது பொய். தேர்தலை ஒத்திப்போடுவதற்காக அரசு இறுதியாகக் கையில் எடுத்திருக்கும் ஆயுதம் அது.

தேர்தலை நடத்துவதற்கு அரசு பணம் வழங்காவிட்டால் மக்களை திரட்டி வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்துவோம். பணத்தை வழங்கும்வரை விடமாட்டோம்” – என்றார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட...

மூத்த அரசியல்வாதி காலமானார்

இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண காலமானார்.  சிறிது...

கைதாகி விடுதலையான முக்கிய அதிகாரி

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின், கார் பதிவு பிரிவின் முன்னாள் பிரதி ஆணையாளர்...

சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளர் மீது லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் புகார்

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவின் தனிப்பட்ட செயலாளர் சமீர கல்லாகே, ஒரு புகாரில்...