இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளின் 75வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இளைஞர் மன்ற தலைமைத்துவ உச்சி மாநாடு 2023, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் கொழும்பில் இன்று காலை ஆரம்பமானது. ,
இலங்கை முழுவதும் இருந்து 60 இளைஞர் மன்ற உறுப்பினர்கள் இதில் கலந்துகொண்டுள்ளனர்.
கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம் மற்றும் மாத்தறையில் அமெரிக்கன் ஸ்பேஸ்ஸால் நடத்தப்படும், இளைஞர் மன்றத்தின் தலைமைத்துவ உச்சி மாநாடு 2023 இன் நோக்கமானது, இளைஞர்களிடையே தலைமைத்துவ திறன்களை வளர்ப்பதாகும், இது முன்மாதிரியான உள்ளடக்கம், சமத்துவம் மற்றும் வெளிப்படைத்தன்மையை கொண்டதாகும்.
உச்சிமாநாடு பெப்ரவரி 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் கொழும்பில் ஊடாடும் பட்டறைகள் மற்றும் திறன் வளர்ப்பு அமர்வுகளுடன் நடைபெறவுள்ளது, இது இளைஞர் மன்ற உறுப்பினர்களின் சமூகப் பிரச்சினைகளைக் கண்டறிதல் மற்றும் இலங்கையின் எதிர்காலத்தை வலுப்படுத்தக்கூடிய இந்தப் பிரச்சினைகளுக்குப் புதுமையான தீர்வுகளை வடிவமைக்கும் திறனை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டது. . உச்சிமாநாடு இலங்கையின் வளமான சுற்றுச்சூழல் அமைப்புகளுக்குத் திரும்பக் கொடுக்கும் சேவை-கற்றல் திட்டத்துடன் முடிவடையும்.
N.S