கண்டியில் விசேட போக்குவரத்து ஏற்பாடு

Date:

இலங்கையின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று (பிப்ரவரி 19) கண்டியில் நடைபெறவுள்ள ஜனராஜ பெரஹெராவை முன்னிட்டு விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்த போக்குவரத்து திட்டத்தின்படி, மாலை 5.00 மணி முதல் அமல்படுத்தப்படும். நாளை ஊர்வலம் முடியும் வரை தலதா மாளிகை தெரு, யட்டிநுவர தெரு, ராஜா தெரு, கந்த தெரு ஆகிய இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும்.

இதனடிப்படையில் வாகன சாரதிகள் இந்த காலப்பகுதியில் மாற்று வழிகளை பயன்படுத்தி அசௌகரியங்களை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கண்டி நகரிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தலதா மாளிகையில் 34 வருட இடைவெளிக்குப் பின்னர் ‘ஜனராஜ பெரஹரா’ நடைபெறவுள்ளது.

75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஊர்வலம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

மாலை 6.30 மணிக்கு மகுல் மடுவ வளாகத்தில் இருந்து ஊர்வலம் ஆரம்பமாகவுள்ளது. தலதா வீதி, யட்டிநுவர வீதி, கந்த வீதி, ராஜா வீதி ஆகிய வீதிகளில் ஊர்வலமாகச் சென்று தலதா மாளிகைக்கு செல்வதுடன், நிகழ்வு நிறைவடையும்.

சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் ‘ஜனராஜ பெரஹெர’ இடம்பெறுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம்  120 ரூபாவிற்கும்...

IMF தரும் மகிழ்ச்சி செய்தி

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) குறித்த நான்காவது மதிப்பாய்வை சர்வதேச...

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...